Monday 6th of May 2024 03:28:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய பிரதமர் மோடியின் ருவிட்டர் சமூக  வலைதளத்தில் ஊடுருவிகள் நுழைந்து பதிவு!

இந்திய பிரதமர் மோடியின் ருவிட்டர் சமூக வலைதளத்தில் ஊடுருவிகள் நுழைந்து பதிவு!


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் சமூக வலைத்தள பக்கத்துக்குள் இன்று அதிகாலை ஊடுருவிய விசமிகள் பிட்கொய்ன் (Bitcoin) எனப்படும் இணைய வழி பணப் பரிமாற்ற முறைமை இந்தியாவில் சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

மோடியின் ருவிட்டர் பக்கத்தை பல மில்லின் பேர் பின்தொடரும் நிலையில் இந்தப் பதிவால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ருவிட்டர் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பிரதமரின் ருவிட்டர் கணக்கு மீட்க்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ருவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹாக் செய்யப்பட்டது. பிட்கொயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக இணைய ஊடுருவிகள் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த கணக்கு ஹாக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE